News January 22, 2025

திருமயம் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

image

திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுகை எஸ்.பி அபிஷேக்குமார் பரிந்துரையின் பேரில் டிஜிபி சங்கர் ஜிவால் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருமயம் அருகே கனிமவள கொள்கைக்கு எதிராக போராடியவர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Similar News

News October 16, 2025

புதுகை: அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் நேற்று அறந்தாங்கி அருகே உள்ள செட்டிக்காடு பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு மேலும் அவரிடம் இருந்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

News October 16, 2025

புதுகை: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை ரெடி!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

புதுகை: பிணமாக கரை ஒதுங்கிய உடல்!

image

மீமிசல் அடுத்துள்ள கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி பொதுமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!