News January 22, 2025
திருமயம் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுகை எஸ்.பி அபிஷேக்குமார் பரிந்துரையின் பேரில் டிஜிபி சங்கர் ஜிவால் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருமயம் அருகே கனிமவள கொள்கைக்கு எதிராக போராடியவர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
புதுகை: ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற அழைப்பு!

புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின எழுத்தாளர்களை மேம்படுத்தும் வகையில், கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப்பெற விரும்புவோர் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
புதுகை: முதல்வரை சந்தித்த ஒன்றிய செயலாளர்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் உடன்பிறப்பே வா என்ற நிகழ்வின் மூலம் திமுக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதன் உடன் பிறப்பே வா என்ற நிகழ்வில் கலந்து கொண்டு, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அவருடைய தொகுதி பற்றி கலந்துரையாடினார்.
News November 16, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


