News October 23, 2024
திருமயத்தைச் சேர்ந்த 12 பேர் மாநில போட்டிக்குத் தேர்வு

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பயிற்றுனர் அப்துல் காதர் பயிற்றுவித்த திருமயம் மாணவர்கள், 12 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை பெற்றுள்ளனர். முதலிடம் பிடித்தவர்கள் 12 பேரும் மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க வருகின்றனர். ஷேர் செய்யவும்
Similar News
News November 25, 2025
புதுகை: 10TH போதும்! அஞ்சலகங்களில் வேலை வாய்ப்பு

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்காக நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 வயதில் நிரம்பி 10ம் வகுப்பு முடித்தவர்கள், Ex ராணுவத்தினர் Ex அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.3 முதல் 5ம் தேதி வரை நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04322-221220 தொடர்பு கொள்ள அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
புதுகை: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த சுல்லானியை சேர்ந்தவர் ஆத்மநாதன்(31). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர். இந்நிலையில் நேற்று சுல்லானியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் வசந்தா(50) அளித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 25, 2025
புதுகையில் 21 பேர் மீது வழக்கு பதிவு!

கூழையன்காட்டில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள 2 கிணறுகளில் குப்பை கழிவுகளை ஆலங்குடி பேரூராட்சி ஒப்பந்ததாரர் கொட்டினார். இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டதாக கிராம மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குடி போலீசார் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


