News March 3, 2025
திருமண உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர்.
Similar News
News November 13, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா தாளடி பயிர்களை, இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கான பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையாக ரூ.564ஐ அருகில் உள்ள பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் (4.11.2025) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள் வருகிறது. இதில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (13.11.2025) மயிலாடுதுறை நகராட்சி காவேரி நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
News November 13, 2025
மயிலாடுதுறை: புதிய வருவாய் அலுவலர் பதவியேற்பு

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக ஆர். பூங்கொடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் சென்னை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலராக இருந்து வந்துள்ளார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி நாகை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


