News March 26, 2025
திருமணம் செய்ய மறுப்பு: வீடியோவை வெளியிட்ட போலீஸ்

மாங்காடு பகுதியில் வசிப்பவர் ஆனந்த் (38). கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரியும் இவருக்கு, ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த பெண் திருமணத்திற்கு மறுக்க, தன்னுடன் அந்த பெண் இருந்த புகைப்படம், வீடியோ பதிவுகளை பெண்ணின் உறவினர்களுக்கு ஆனந்தன் அனுப்பி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் ஆனந்தனை நேற்று (மார்.25) கைது செய்தனர்.
Similar News
News November 9, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்உறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (நவம்பர் 10) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள் எனவே பொதுமக்கள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
News November 9, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவம்பர். 08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
காஞ்சிபுரம் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<


