News March 26, 2025
திருமணம் செய்ய மறுப்பு: வீடியோவை வெளியிட்ட போலீஸ்

மாங்காடு பகுதியில் வசிப்பவர் ஆனந்த் (38). கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரியும் இவருக்கு, ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த பெண் திருமணத்திற்கு மறுக்க, தன்னுடன் அந்த பெண் இருந்த புகைப்படம், வீடியோ பதிவுகளை பெண்ணின் உறவினர்களுக்கு ஆனந்தன் அனுப்பி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் ஆனந்தனை நேற்று (மார்.25) கைது செய்தனர்.
Similar News
News November 16, 2025
காஞ்சியில் கனமழை வெளுக்கும்!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை (நவ.17) & நவ.18ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட, மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணி அலெர்ட் பண்ணுங்க.
News November 16, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
யோகா பயிற்சியாளர் தேர்வுக்கு அழைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகளைப் பயன்படுத்துவர்களுக்காக தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம் / யோகா மற்றும் இயற்கை அறிவியல் டிப்ளமோ சான்றிதழ் சான்றிதழுடன் நவ.19-க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு அனுப்பவும்.


