News April 2, 2025

திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க.!

image

சிவகங்கை பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிவகங்கையில் ஒரு கோயில் எழுப்பி அந்த கோயிலுக்கு சசிவர்ணேஸ்வரர் கோயில் என பெயர் சூட்டினார். இந்த கோயிலில் உள்ள துர்க்கையம்மன் இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனை கிடத்திய நிலையில் காட்சி அளிக்கும். இந்த ஆலயத்தில் சுகப்பிரசவமாக, திருமணத் தடை நீங்க, மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு துர்க்கையம்மனிடம் வேண்டினால் அது நடக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

Similar News

News November 7, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கையில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

காரைக்குடி: இளம் பெண் கொலை – ஒருவர் கைது

image

காரைக்குடி அருகே ஆவடைபொய்கை என்ற இடத்தில் நேற்று மகேஸ்வரி என்ற பெண் அவரது காரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் சசிகுமார் என்ற இளைஞரை கைது செய்து விசாரித்ததில், அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாத போலீசார் தெரிவித்துள்ளனர்.

News November 7, 2025

சிவகங்கை: விவசாயிகள் நில விவர பதிவு நீட்டிப்பு

image

விவசாயிகளின் நில உடைமை விவர பதிவு செய்யும் காலக்கெடு ஏப்ரல்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் சுந்தர மகாலிங்கம் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு திட்டங்களின் நன்மைகளை பெறும் போது, விவசாயிகள் ஒவ்வொரு முறையும் தங்களது நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!