News April 2, 2025

திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க.!

image

சிவகங்கை பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிவகங்கையில் ஒரு கோயில் எழுப்பி அந்த கோயிலுக்கு சசிவர்ணேஸ்வரர் கோயில் என பெயர் சூட்டினார். இந்த கோயிலில் உள்ள துர்க்கையம்மன் இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனை கிடத்திய நிலையில் காட்சி அளிக்கும். இந்த ஆலயத்தில் சுகப்பிரசவமாக, திருமணத் தடை நீங்க, மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு துர்க்கையம்மனிடம் வேண்டினால் அது நடக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

Similar News

News April 10, 2025

வெட்டுடையா காளி கோயிலில் ஏன் காசு வெட்டிப் போடுகிறார்கள்?

image

சிவகங்கை அரியாக்குறிச்சியில் உள்ள வெட்டுடையா காளி கோயில் மாவட்டத்தின் ஒரு முக்கிய கோயிலாகும். இங்கு காளி எட்டு கைகளுடன் அசுரனை வதம் செய்தபடி காட்சி கொடுக்கிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரோகம், நீதி கிடைக்க இந்தக் கோயிலில் காசு வெட்டிப் போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் காளி தட்டிக் கேட்பால் என்பது நம்பிக்கை. மாலையில் காளி மீது சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு.

News April 10, 2025

காரைக்குடி 1000 ஜன்னல் வீடு பற்றி தெரியுமா?

image

காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு மிகவும் பிரபலமாகும். 1941ஆம் ஆண்டு 20,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகை அந்த காலத்திலேயே சுமார் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த வீட்டில் 25 பெரிய அறைகள் மற்றும் ஐந்து பெரிய ஹால்கள் உள்ளன. மேலும் வீட்டில் சுமார் 20 கதவுகள் மற்றும் 1000 ஜன்னல்கள் உள்ளன. இதன் பாரம்பரியம் மாறாமல் தற்போது வரை இந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. Share It.

News April 10, 2025

சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளர் (GENERAL HELPER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்குள் படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். *வேலை தேடும் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

error: Content is protected !!