News April 22, 2025
திருமணத் தடை நீக்கும் சுயம்பு மூர்த்தி

தர்மபுரி மாவட்டம் அமானிமல்லாபுரம் பகுதியில் சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாளித்து வரும் சுயம்பு மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், குழந்தை பாக்கியம் கிட்டும் எனவும் கல்வியில் சிறந்து விளங்கலாம் எனவும் கூறப்படுகிறது. திருமணத்தடை உள்ள நண்பர்களுக்கு இதை சேர் செய்யவும்..,
Similar News
News September 14, 2025
ஒகேனக்கலில் தொடரும் தடை

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன. பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே, ஒகேனக்கலில் பொதுமக்கள் குளிப்பதற்குத் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
News September 14, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் நிலைய வாரியாக இரவு ரவுண்ட்ஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட இரவு ரவுண்ட்ஸ் அதிகாரியாக ஹரூர் துணை பிரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.கரிகல் பாரி சங்கர், டி.எஸ்.பி. பொறுப்பேற்றுள்ளார். அதிகாரிகளின் கைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
News September 13, 2025
தர்மபுரி: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <