News April 12, 2025
திருமணத் தடை நீக்கும் அற்புத கோயில்

ஈரோடு, சென்னிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயர மலையின் மீது கம்பீரமாக அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கைகூடும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 23, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டறிந்தனர். வீட்டிற்குள் சோதனை செய்தபோது ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தனுஷ் ,குரு பிரகாஷ் இருவரை கைது செய்தனர்.
News November 23, 2025
தாளவாடி அருகே சோகம்! முதியவர் உயிரிழப்பு

தாளவாடி அடுத்த பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெள்ளையா (65) இவர் அருகிலுள்ள தமிழ்புரம் பகுதிக்கு ரோடு போடும் வேலைக்காக சென்றுள்ளார். அங்கிருந்த தொழிலாளர்களிடம் பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கூறி குட்டைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வராததால் தொழிலாளர்கள் குட்டைக்கு சென்று பார்த்த போது பெள்ளையா இறந்து கிடந்துள்ளார். தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
ஈரோடு கவிஞர் தமிழன்பன் காலமானார்

சென்னிமலையில் பிறந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ போன்ற கவிதைகளைப் படைப்பதில் வித்தகராகத் திகழ்ந்தவர்.இவரின் இறுதிச் சடங்கு சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என தகவல்.


