News June 27, 2024

திருப்பூர்: 14 கடைகளுக்கு சீல் வைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை, காவல் துறை, ஊராட்சி அமைப்புகளுடன் இணைந்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் நேற்று ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக புகார்களை பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.

Similar News

News July 11, 2025

BREAKING: ரிதன்யா மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

image

திருப்பூர், அவினாசி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் அவரது தந்தை மற்றும் தாயார் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News July 11, 2025

திருப்பூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

➡️ திருப்பூர் மாவட்டத்தில் நாளை 33,131 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய ஒரு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை (ஜூலை.12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவிலும் நடைபெற உள்ளது. இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். திருப்பூர் மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!