News June 27, 2024
திருப்பூர்: 14 கடைகளுக்கு சீல் வைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை, காவல் துறை, ஊராட்சி அமைப்புகளுடன் இணைந்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் நேற்று ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக புகார்களை பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.
Similar News
News November 28, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் மங்களம் நால்ரோடு பகுதியில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை சோதனை செய்தபோது, கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சையத் அன்சாரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
News November 28, 2025
திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் திருத்த படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்ப பெற்றுக் கொள்வார்கள். வாக்காளர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 4ம் தேதி ஆகும். இறுதி நாள் வரை காத்திருக்காமால் ஓரிரு தினங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் திருத்த படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்ப பெற்றுக் கொள்வார்கள். வாக்காளர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 4ம் தேதி ஆகும். இறுதி நாள் வரை காத்திருக்காமால் ஓரிரு தினங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.


