News June 27, 2024

திருப்பூர்: 14 கடைகளுக்கு சீல் வைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை, காவல் துறை, ஊராட்சி அமைப்புகளுடன் இணைந்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் நேற்று ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக புகார்களை பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.

Similar News

News November 22, 2025

திருப்பூர் கொலை: பரபரப்பு தீர்ப்பு!

image

திருப்பூரில் 2018 ஆம் ஆண்டு போயம்பாளையம் பகுதியில் கணேசன், 2020 ஆம் ஆண்டில் வெங்கமேட்டில் அன்பரசன், கல்லூரி சாலையில் முத்து ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர் மீதான வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது. இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், சங்கருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள், நேற்று முந்தினம் இரவு கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது தாராபுரம் சாலை என்.காஞ்சிபுரம் செங்காட்டு தோட்டம் அருகே வந்தபோது, திடீரென நிலை தடுமாறி கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஐவரும் படுகாயமடைந்தனர். இதில் ஒரு மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 21, 2025

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 21.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!