News April 17, 2025
திருப்பூர்: விபத்தில் ஒருவர் பலி!

திருப்பூர், பெருமாநல்லூர் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
திருப்பூர்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
திருப்பூர்: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 26, 2025
திருப்பூரில் இப்பகுதியில் Shutdown! அலெர்ட்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ரங்கநாதபுரம், ராமமூர்த்தி நகர், ராமையா காலனி, கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது


