News September 29, 2025
திருப்பூர்: வட மாநில இளைஞர் கைது!

திருப்பூர்: காங்கேயம் சாலையில் நல்லூர் போலீசார் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது, ஆலமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பீகாரைச் சேர்ந்த பிரம்மானந்த ராஜ்(35) என்பதும், அவரிதும் 269 மில்லிகிராம் ஹெராயின் எனும் போதைப் பொருள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 11, 2025
திருப்பூர்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்றே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 11, 2025
திருப்பூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3மணி வரை, எல் ஆர் ஜி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 10th, +2, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.23க்குள் இந்த லிங்கை <


