News October 25, 2024
திருப்பூர்: ரூ.10 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

வெள்ளகோவிலில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி 15ஆவது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, வருமுன் காப்போம் ஆகிய திட்டங்களின் கீழ் 6 பணிகளை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News December 23, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, புதிய பஸ் ஸ்டேண்ட், நெசவாளர் காலனி, அருள்ஜோதிபுரம், முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், லட்சுமி நகர், ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ரங்கநாதபுரம், கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், இட்டேரி ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 23, 2025
திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 23, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் தெற்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீஸாரின் சோதனையில் 3 பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பெண்களை நீதிமன்ற காவலுக்கும், 1 பெண்ணை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.


