News April 18, 2025

திருப்பூர்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

Similar News

News December 20, 2025

திருப்பூர் மக்களே: இன்று இங்கு மின்தடை!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, தாராபுரம் ரோடு, வாலிபாளையம், செட்டிபாளையம், காதர்பேட்டை, பழவஞ்சிபாளையம், ப.வடுகபாளையம், பல்லடம் நகர், மாதப்பூர், இந்திரா நகர், பூம்புகார் நகர், சிவன்மலை, அரசம்பாளையம், கீரணூர், பெருமாள்மலை, ஆலாம்பாடி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 20, 2025

தாராபுரத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார், தாராபுரம் பொள்ளாச்சி ரோடு அருண் பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பல்லடம் பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த அஜய் சஹானி (37) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

News December 20, 2025

திருப்பூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!