News August 9, 2024
திருப்பூர் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

அரசு பள்ளியில் பயின்ற உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கக்கூடிய தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் இத்திட்டத்தினை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
Similar News
News November 28, 2025
திருப்பூர்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 28, 2025
திருப்பூரில் இடம் மாறுகிறது. எது தெரியுமா?

திருப்பூர், பார்க் ரோட்டில், மாவட்ட மைய நுாலகம் உள்ளது. 50 ஆண்டு முன் பொது நுாலகத்துறை நிறுவிய திருப்பூரின் முதல் நுாலகம் இது.இந்நிலையில், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் பின், எஸ்.பி. அ லுவலகம் அருகே, கோர்ட் எதிர்புறம் காலியாக உள்ள, 75 சென்ட் இடத்தில், மூன்று தளங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட மாவட்ட மைய நுாலகம் கட்ட ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒன்பது கோடி ரூபாயில் கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
திருப்பூர் அருகே பயங்கர விபத்து!

திருப்பூர்-தாராபுரம் சாலையில் வேங்கிபாளையம் பஸ் நிலையம் அருகே கன்டெய்னர் லாரி ஒன்று சாலையோரமாக நின்று கொண்டு இருந்தது. அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று. அந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


