News May 17, 2024
திருப்பூர்: போக்குவரத்து நெரிசல்… மக்கள் அவதி

காங்கேயம் பஸ் நிலையத்திலிருந்து பழைய கோட்டை சாலை போக்குவரத்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்தச் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தக் கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.
Similar News
News January 1, 2026
திருப்பூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா?

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE
News January 1, 2026
உடுமலை அருகே விபத்து: இளைஞர் பலி

திருப்பூர், உடுமலை யூகேபி நகரை சேர்ந்த உத்தமராஜ் மகன் விக்னேஷ். இவர் நேற்று திருப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த நிலையில், அம்மாபட்டி பிரிவு அருகே கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார்.
News December 31, 2025
திருப்பூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!


