News May 17, 2024
திருப்பூர்: போக்குவரத்து நெரிசல்… மக்கள் அவதி

காங்கேயம் பஸ் நிலையத்திலிருந்து பழைய கோட்டை சாலை போக்குவரத்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்தச் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தக் கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.
Similar News
News September 14, 2025
திருப்பூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 16ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணாக்கர்கள், ஏற்கனவே கல்லுாரியில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை, 0421 -2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்! அதிகம் SHARE பண்ணுங்க!
News September 14, 2025
திருப்பூரில் அதிரடி கைது: சிக்கிய நபர்!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சஹாதேப் பிடிகா (45) என்பவரை கைது செய்து 8 கிலோ குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News September 14, 2025
திருப்பூரில் சோகம்: இளைஞர் விபரீத முடிவு

சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ராஜவேல். இவர் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தனது தந்தைக்கு செல்ஃபோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் மாத சம்பளம் செலவுக்கு சரியாக இருந்தால், செல்போன் வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்த ராஜவேல் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.