News January 23, 2025
திருப்பூர் புத்தக திருவிழா இன்று தொடக்கம்!

திருப்பூரில் 21வது புத்தக கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 140 ஸ்டால்களில் 75க்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. இந்த கண்காட்சி இன்று தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ள, உங்கள் பிள்ளைகள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள செய்தியை share செய்யுங்கள்.
Similar News
News December 13, 2025
திருப்பூர் அருகே மதுவால் நேர்ந்த வினை: பறிபோன உயிர்!

திருப்பூர் அவிநாசி, மங்கலம் ரோடு ராயன் கோவில் காலனியில் வசிப்பவர் ராமசாமி. இவர், தனது நண்பர் ஜெகதீஷுடன், நேற்று முந்தினம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜெகதீஷன் தள்ளிவிட்டதில் ராமசாமி கீழே விழுந்து, சுயநினைவை இழந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், ராமசாமியை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதனை அடுத்து ஜெகதீஷை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 13, 2025
திருப்பூரில் பாலியல் தொல்லை! அதிரடி தீர்ப்பு

திருப்பூர், ராக்கியாபாளையம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி கேட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரேம்குமார் என்ற முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில் பிரேம்குமாருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது.
News December 13, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள. காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


