News October 24, 2024
திருப்பூர்: தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் மங்களூர் சிறப்பு ரயில் வருகின்ற இரண்டாம் தேதி இரவு 11:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த ரயில் மூன்றாம் தேதி காலை திருப்பூருக்கு 6.40 மணிக்கு வந்து சேரும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 15, 2025
மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் தலா ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் 4 பயனாளிக்களுக்கு ரூ.26 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் சலவைப்பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.
News September 15, 2025
திருப்பூர்: 12th போதும் வங்கி வேலை!

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://nabfins.org/Careers/ இந்த லிங்கை அணுகவும். SHARE பண்ணுங்க!
News September 15, 2025
திருப்பூரில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகேயுள்ள பேரநாய்க்கன்வலசு கிராமத்தில், ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகளை, வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயி குமார், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை.