News March 23, 2025
திருப்பூர் சுகாதாரத்துறையில் வேலை!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நாளைக்குள் (24ஆம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News September 13, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின், அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், உடுமலை, பல்லடம், அவிநாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News September 13, 2025
திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஊத்துக்குளி , ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், சேடர்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நிலாக்கவுண்டன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News September 13, 2025
திருப்பூர்:அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலம் பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று தாந்தோணி கோபால்சாமி என்பவரின் தோட்டத்தின் அருகில் கரை ஒதுங்கி உள்ளது. இவரது உடலில் எந்தவித காயங்களும் இல்லை. மார்பின் நடுவே ஆபரேஷன் பண்ணிய பழைய காயத் தழும்பு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.