News April 11, 2025
திருப்பூர் சத்துணவு மையத்தில் வேலை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இந்த பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சியில் சமர்ப்பிக்கலாம்.
Similar News
News November 27, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 27.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் .அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .
News November 27, 2025
புனித பயணம் மேற்கொள்ள மானியம் பெறலாம்

ஜெருசலேம் புனித பயணம் செல்ல மானியம் பெற, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தினை வரும் பிப்ரவரி மாதம் 28-ந்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.
News November 27, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக் காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை, வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பங்குனி திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.


