News April 11, 2025
திருப்பூர் சத்துணவு மையத்தில் வேலை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இந்த பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சியில் சமர்ப்பிக்கலாம்.
Similar News
News November 22, 2025
திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள், நேற்று முந்தினம் இரவு கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது தாராபுரம் சாலை என்.காஞ்சிபுரம் செங்காட்டு தோட்டம் அருகே வந்தபோது, திடீரென நிலை தடுமாறி கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஐவரும் படுகாயமடைந்தனர். இதில் ஒரு மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 21.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 21, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா!

திருப்பூர், அவிநாசியை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறார். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.


