News December 5, 2024

திருப்பூர் கொலை: மேலும் 5 தனிப்படைகள் அமைப்பு

image

பொங்கலூர் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி அலமேலு இவர்களது மகன் செந்தில்குமார் ஆகிய மூன்று பேரும், கடந்த மாதம் 29ஆம் தேதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஏற்கனவே 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மேலும் ஐந்து தனிப்படைகள் அமைத்து மொத்தம் 16 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News October 22, 2025

திருப்பூர்: டிகிரி முடித்தால் ரயில்வே வேலை!

image

திருப்பூர் பட்டதாரிகளே, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க வரும் நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News October 22, 2025

JUSTIN:திருப்பூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்துள்ளார்.

News October 22, 2025

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ஒடிசாவைச் சேர்ந்தவர் டிரானாசூனா (47). திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள ஆயில் மில்லில் வேலை செய்து வந்தார். நடேசன் நகர் பகுதியில் கோவை – கரூர் மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த கார், டிரானாசூனா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!