News March 25, 2024

திருப்பூர்: கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

பொங்கலூர் அருகே பெருந்தொழுவிலிருந்து சாலையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி 4 யூனிட் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த கிராவல் மண் கடத்திய கோவிந்தராஜ் நாச்சிமுத்து மற்றும் செல்ல குட்டி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினர்.

Similar News

News April 18, 2025

திருப்பூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

▶️திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் 0421-2250192.▶️திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் 0421-2200553.▶️அவிநாசி வட்டாட்சியர் 04296-273237.▶️பல்லடம் வட்டாட்சியர் 04255-253113.▶️காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689.▶️உடுமலை வட்டாட்சியர் 04252-223857.▶️மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588.▶️ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 18, 2025

திருப்பூர்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

திருப்பூர்: கடன் தொல்லையால் தற்கொலை

image

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் தங்கராஜ். இவர் கடந்த 8 வருடங்களாக திருப்பூர்,வெள்ளகோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் அருகில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக, கடன் தொல்லையால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை விரக்தியடைந்த தங்கராஜ், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!