News March 29, 2024
திருப்பூர்: கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த ஆறு மாத காலமாக அனைத்து விதமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிஏபி ஆயக்கட்டில் பதிவு செய்யப்பட்ட ஆயகட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்காமல், தண்ணீர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி கருப்பு கொடியை கட்டி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
காங்கேயம் அருகே தொழிலாளி பலி

முத்தூர், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் மணி (56). இவர் நேற்று முத்தூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார். இதில் திடிரென மணி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
காங்கேயம் அருகே தொழிலாளி பலி

முத்தூர், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் மணி (56). இவர் நேற்று முத்தூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார். இதில் திடிரென மணி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

திருப்பூர் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியில் மங்களம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கட்டிராஜா மற்றும் திருமூர்த்தி ஆகியோரிடம் சோதனை நடத்தியபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 950 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


