News March 29, 2024
திருப்பூர்: கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த ஆறு மாத காலமாக அனைத்து விதமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிஏபி ஆயக்கட்டில் பதிவு செய்யப்பட்ட ஆயகட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்காமல், தண்ணீர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி கருப்பு கொடியை கட்டி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
Similar News
News December 6, 2025
இரவு ரோந்து போலீசார் பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (5.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, குடிமங்கலம், செய்யூர், ஊதியூர், வெள்ளகோவில் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News December 5, 2025
திருப்பூரில் ஆச்சர்யம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருப்பூரில் உள்ள தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்ற வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
News December 5, 2025
திருப்பூர்: மது குடிப்பவரா நீங்கள் ? முக்கிய தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் குடித்து விட்டு விளை நிலங்கள், சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால் இதனை, தடுக்கும் விதமாக காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் நேற்று, நவ, 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. காலி மதுபாட்டலை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்ரோடு, அதே மதுக்கடையில் ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்தார்.


