News April 20, 2025

திருப்பூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பூர், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, அலங்கியம் அருகே உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News November 24, 2025

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 283 மனுக்கள்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் 283 மனுக்களை வழங்கியுள்ளனர். மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அதனை விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளார் ‌

News November 24, 2025

காங்கேயம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ரோந்து சென்ற போலீசார் பரஞ்சேர்வழி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணி (58) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 24, 2025

வெள்ளகோவிலில் ரூ.270-க்கு முருங்கை விற்பனை

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் முருங்கை மொத்த சந்தை நேற்று நடைபெற்றது. இதில் சுற்று வட்டார விவசாயிகள் 1 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில் மர முருங்கை கிலோ ரூ.120-க்கும், செடி முருங்கை ரூ.150-க்கும், கரும்பு முருங்கை கிலோ ரூ.270-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!