News August 16, 2024
திருப்பூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 23, 2025
திருப்பூர்: கார் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூரில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத கார் மோதியதில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அறிந்த அவிநாசிபாளையம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உயரிழந்தவர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 23, 2025
திருப்பூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 23, 2025
திருப்பூர்: வட மாநில வாலிபர் கொலை

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அனில் குமார் ஜனா. போயம்பாளையம் அடுத்த கங்கா நகர் பகுதியில் உள்ள பனியன் சாய தொழிற்சாலையில் பணிபுரிந்து விடுதியில் தங்கி வருகிறார். இவருக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அம்ரித் , அமான் உள்ளிட்ட 3 பேருக்கும் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேரும் அனில் குமார் ஜனாவை கட்டையால் அடித்து கொலை செய்தனர். அனுப்பர்பாளையம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.