News March 10, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் உள்ள இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2025
இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 11.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2025
லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதிக்குட்பட்ட இடையம்பாளையம் பகுதியில் சிட்டாவில் பெயர் சேர்க்க 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இடையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News March 11, 2025
திருப்பூரில் தபால் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருப்பூர் தலைமை தபால் நிலையம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. தபால்துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின் வரும் 14ம் தேதிக்குள், ‘பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.