News April 23, 2025

திருப்பூர்: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News November 24, 2025

அவிநாசி அருகே விபத்து: 12 பேர் காயம்

image

சேலத்தைச் சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்களுடன், சபரிமலைக்கு பஸ் ஒன்று புறப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு திருப்பூர் அவிநாசி அருகே வந்த போது இடதுபுற பின் பக்க டயர் வெடித்ததில் பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. இதில், 12 பக்தர்கள் காயமடைந்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 24, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர் அதிரடி கைது

image

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் மத்திய போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோத லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு கந்தசாமி மற்றும் சிங்கராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

News November 24, 2025

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

image

திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட சுண்டமேடு மற்றும் மும்மூர்த்தி நகர் பகுதிகளில் உள்ள மதுபான கடை அருகே சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட சரவணன் மற்றும் கிரிநாத் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!