News August 16, 2024
திருப்பூருக்கு இனி HAPPYதான்

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் இரவு நேர கொள்ளை சம்பவங்களை தடுத்திடும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் மாநகர காவல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 9, 2025
தாராபுரத்தில் சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

தாராபுரம் அருகே உள்ள ராமபட்டினத்தைச் சேர்ந்த செல்லதுரை என்ற கூலித் தொழிலாளியின் மகள் தாரணி. இவர் வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர் இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
News December 9, 2025
திருப்பூர்: கொட்டிக்கிடக்கும் வேலைகள் APPLY NOW

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


