News August 16, 2024

திருப்பூருக்கு இனி HAPPYதான்

image

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 26, 2025

திருப்பூர்: சொந்த வீடு வேண்டுமா?

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 26, 2025

திருப்பூரில் இப்பகுதியில் Shutdown! அலெர்ட்

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ரங்கநாதபுரம், ராமமூர்த்தி நகர், ராமையா காலனி, கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

News November 26, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் கூத்தம்பாளையம் டாஸ்மாக் அருகே சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருமுருகன்பூண்டி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட லோகேஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!