News August 16, 2024
திருப்பூருக்கு இனி HAPPYதான்

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
திருப்பூர்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

திருப்பூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.16) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி, சாமந்தகோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலாம்பாளையம், பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பொங்குபாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 14, 2025
தாராபுரம் அருகே சோகம்: பள்ளி மாணவர் உயிரிழப்பு!

குண்டடம் தாலுகா ருத்ராவதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் ஸ்ரீ ஹரி உடல்நிலை மோசமானது. இதனால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ஹரி உயிரிழந்தார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


