News March 26, 2025

திருப்பூரில் SSLC பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தயார்

image

திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆயிரத்து 235 மாணவ, மாணவியர் பொது தேர்வை எழுத உள்ளனர். 104 தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 10ஆம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவுபெற்று தயார் நிலையில் உள்ளன.

Similar News

News November 26, 2025

திருப்பூர்: சொந்த வீடு வேண்டுமா?

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 26, 2025

திருப்பூரில் இப்பகுதியில் Shutdown! அலெர்ட்

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ரங்கநாதபுரம், ராமமூர்த்தி நகர், ராமையா காலனி, கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

News November 26, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் கூத்தம்பாளையம் டாஸ்மாக் அருகே சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருமுருகன்பூண்டி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட லோகேஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!