News August 16, 2024
திருப்பூரில் 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்
88 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் தொழிலாளர்களை பணி அமர்த்திய 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
Similar News
News December 25, 2025
திருப்பூர் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

திருப்பூர் மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
ஆதார் : https://uidai.gov.in/
வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
பான் கார்டு : incometax.gov.in
தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
திருப்பூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruppur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
திருப்பூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
திருப்பூரில் அதிமுக பிரமுகர் பலி!

திருப்பூர், சந்திராபுரம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(54). இவர் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் நேற்று இரவு திருப்பூர் ஊத்துக்குளி சாலை 2-வது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


