News March 25, 2025

திருப்பூரில் விவசாயிகள் 43 பேர் மீது வழக்கு

image

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தைச் சேர்ந்த 43 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News July 11, 2025

BREAKING: ரிதன்யா மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

image

திருப்பூர், அவினாசி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் அவரது தந்தை மற்றும் தாயார் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News July 11, 2025

திருப்பூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

➡️ திருப்பூர் மாவட்டத்தில் நாளை 33,131 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய ஒரு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை (ஜூலை.12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவிலும் நடைபெற உள்ளது. இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். திருப்பூர் மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!