News August 24, 2024

திருப்பூரில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்

image

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் 1 பகுதியாக திருப்பூர்-காங்கேயம் சாலையில் தனியார் பள்ளி முன்பு இருந்து விஜயாபுரம் பகுதி வரை ரூ.65 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Similar News

News November 15, 2025

திருப்பூர் அருகே தொழிலாளி தற்கொலை!

image

பொங்கலூர் அருகே உள்ள குருநாதன்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளியான இவர் கடந்த 8 ஆம் தேதி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்று பாண்டி நேற்று உயரிழந்தார். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 15, 2025

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூர் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காங்கேயம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம், அரசம்பாளையம், சாவடிபாளையம், தம்மரெட்டிபாளையம், ஒட்டபாளையம், கீரனூர், பரஞ்சேர்வழி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 15, 2025

திருப்பூர் அருகே 11 பேர் அதிரடி கைது!

image

திருப்பூர், குன்னத்தூர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் சுசீலா தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில், பணம் வைத்துச் சூதாடிய 11 நபர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!