News March 20, 2025
திருப்பூரில் ரோந்துபணி காவல்துறை அதிகாரிகள் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 20.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை தாராபுரம் காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விபரம் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2025
திருப்பூர்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

திருப்பூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
News March 30, 2025
இடுவாய் சித்தி விநாயகர் கோயில்!

திருப்பூர், இடுவாயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் 5 தலைமுறைகளை கடந்து, குளத்தேரி பகுதியில் இருந்துள்ளார். பின்னர் 1995ஆம் ஆண்டு ஊர் மக்கள், சித்தி விநாயகருக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தனர். சக்திவாய்த சித்தி விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடுமாம். இதனால் இங்கு வெளியூர்களில் இருந்து வந்து, பக்தர்கள் விநாயகரை தரிசிக்கின்றனர்.
News March 30, 2025
அவிநாசி புதிய நகராட்சி

அவிநாசி புதிய நகராட்சியாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையின் பேரில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.