News August 25, 2024

திருப்பூரில் போட்டியை துவக்கி வைத்த அமைச்சர்

image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், முதலிபாளையம் சிட்கோவில் இன்று கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். இதில், திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாதன் கலந்து கொண்டார்.

Similar News

News November 28, 2025

திருப்பூர் அருகே பயங்கர விபத்து!

image

திருப்பூர்-தாராபுரம் சாலையில் வேங்கிபாளையம் பஸ் நிலையம் அருகே கன்டெய்னர் லாரி ஒன்று சாலையோரமாக நின்று கொண்டு இருந்தது. அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று. அந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News November 28, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் மங்களம் நால்ரோடு பகுதியில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்‌. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை சோதனை செய்தபோது, கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சையத் அன்சாரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

News November 28, 2025

திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் திருத்த படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்ப பெற்றுக் கொள்வார்கள். வாக்காளர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 4ம் தேதி ஆகும். இறுதி நாள் வரை காத்திருக்காமால் ஓரிரு தினங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!