News March 5, 2025
திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

எர்ணாகுளத்தில் இருந்து பாரவுனி (பீகார்) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-பாரவுனி (வண்டி எண்.06159) ஒரு வழி சிறப்பு ரெயில் நாளை 5-ம் தேதி (புதன்கிழமை) எர்ணாகுளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு வரும் 8-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பாரவுனி ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவினாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 4, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, மாஸ்கோ நகர், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


