News November 24, 2024

திருப்பூரில் பள்ளி மாணவர்களால் ஏற்பட்ட பரபரப்பு

image

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மாலை இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர், பஸ் நிலையத்துக்குள் அங்குமிங்கும் ஓடினார்கள். உடனடியாக அங்கிருந்த தெற்கு போலீஸார் விரைந்து சென்று மாணவர்களைப் பிடிக்க துரத்தினார்கள். அதற்குள் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடித் தப்பினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 4, 2025

திருப்பூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 4, 2025

திருப்பூர் அருகே சோக சம்பவம்!

image

திருப்பூர் இடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மனைவி பேபி. ஆறுமுகம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு வந்த இவர், சிகிச்சை பலன் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 4, 2025

திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டால், நிச்சயம் குணமாகுமாம்.

error: Content is protected !!