News August 15, 2024
திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

திருப்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் என மாநகர் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News January 11, 2026
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 10.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின், அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News January 10, 2026
திருப்பூர் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

திருப்பூர் மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1). ஆதார் : https://uidai.gov.in/
2). வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3). பான் கார்டு : incometax.gov.in
4). தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5). திருப்பூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruppur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
உடுமலை அருகே விபத்து

ஆனைமலையில் இருந்து உடுமலை நோக்கி மினிவேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த பைக் மீது மினிவேன் மோதியது. இவ்விபத்தில் பைக்கில் வந்த கொடுங்கியத்தைச் சேர்ந்த தினகரன், வேதஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், வேதஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


