News August 15, 2024
திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

திருப்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் என மாநகர் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
காங்கேயம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ரோந்து சென்ற போலீசார் பரஞ்சேர்வழி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணி (58) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 24, 2025
வெள்ளகோவிலில் ரூ.270-க்கு முருங்கை விற்பனை

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் முருங்கை மொத்த சந்தை நேற்று நடைபெற்றது. இதில் சுற்று வட்டார விவசாயிகள் 1 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில் மர முருங்கை கிலோ ரூ.120-க்கும், செடி முருங்கை ரூ.150-க்கும், கரும்பு முருங்கை கிலோ ரூ.270-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
News November 24, 2025
திருப்பூர்: 10th போதும் பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
(ஷேர் பண்ணுங்க)


