News November 22, 2024
திருப்பூரில் நாளை வாக்காளர் பட்டியல் முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 23,82,820 வாக்காளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந்த 16 மற்றும் 17ஆம் சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) (ம) நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.08) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News January 8, 2026
திருப்பூர் மக்களே: இத தெரிஞ்சு வச்சுக்கோங்க!

1).திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2).மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. 3).காவல் கட்டுப்பாட்டு அறை 100. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7).பேரிடர் கால உதவி1077. 8).கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை SHARE பண்ணுங்க.
News January 8, 2026
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி போத்தனூரில் இருந்து இன்று இரவு 11.30-க்கு புறப்படும் ரயில் (06194) நாளை காலை 9.50-க்கு சென்னை செல்லும். இது நாளை நள்ளிரவு 12.10-க்கு திருப்பூரிலும், 1.12-க்கு ஈரோட்டிலும் நிற்கும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து நாளை இரவு 11.50-க்கு புறப்படும் ரயில் (06193) அடுத்த நாள் காலை 9.50-க்கு போத்தனூர் சென்றடையும்.


