News March 19, 2024

திருப்பூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடி

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 64 குழுக்கள் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,10,310-ஐ இன்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 28, 2025

திருப்பூர்: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

image

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Accounts Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News November 28, 2025

திருப்பூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 28, 2025

திருப்பூர்: மது குடிப்பவரா நீங்கள் ? முக்கிய தகவல்

image

திருப்பூர் மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் குடித்து விட்டு விளை நிலங்கள், சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால் இதனை, தடுக்கும் விதமாக காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் நேற்று, நவ, 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. காலி மதுபாட்டலை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்ரோடு, அதே மதுக்கடையில் ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்தார்.

error: Content is protected !!