News March 19, 2024
திருப்பூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 64 குழுக்கள் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,10,310-ஐ இன்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 15, 2025
திருப்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 15, 2025
திருப்பூர் மாவட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில், இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 340 மனுக்களை அளித்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில், நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்தவர் கருநீல நிற முழுக்கை சட்டையும், வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


