News August 26, 2024
திருப்பூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான, ராஜா ராஜ ராவ் வீதியில் அமைந்துள்ள, முரசொலி மாறன் வளாகத்தில், கருவம்பாளையம் பகுதி கழக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி நாகராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 13, 2025
திருப்பூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், திருப்பூர் இடுவாய் அருகே உள்ள காலி இடத்தில் கொட்டப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதிப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில், பால் கொடுக்கும் ஊருக்கு பால்டாயில் கொடுப்பதா? என்ற போஸ்டர்கள் கிராம மக்கள் சார்பில், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், பழங்கரை, தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர் ஒரு பகுதி, குளத்துப்பாளையம், பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பொருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், முதியாநெரிச்சல், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 13, 2025
காங்கயம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

காங்கயத்தை அடுத்த துண்டுகாடு, நீலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). நேற்று இவர், வீட்டின் அருகே காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள கடைக்கு வந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, ராமசாமி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமசாமி இறந்தார். இது குறித்து தர்மபுரியை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் (25) மீது காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


