News August 7, 2024

திருப்பூரில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

image

திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆப் செலிப்ரேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. இதனை, மாநகராட்சி ஆணையர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Similar News

News December 23, 2025

திருப்பூரில் சோகம்: பைக் வாங்கி தராததால் தற்கொலை!

image

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே மேற்குபதி சேர்ந்தவர் கென்னடி. பனியன் நிறுவன தொழிலாளியான இவரது மகன் தரனிஷ், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பிரிவில் படித்து வருகிறார். கல்லூரி செல்வதற்கு இருசக்கர வாகனம் மற்றும் லேப்டாப் கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பின்னர் வாங்கி தருவதாக பெற்றோர் தெரிவித்த நிலையில், மணமடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News December 23, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, புதிய பஸ் ஸ்டேண்ட், நெசவாளர் காலனி, அருள்ஜோதிபுரம், முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், லட்சுமி நகர், ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ரங்கநாதபுரம், கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், இட்டேரி ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 23, 2025

திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!