News August 7, 2024

திருப்பூரில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

image

திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆப் செலிப்ரேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. இதனை, மாநகராட்சி ஆணையர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Similar News

News December 16, 2025

திருப்பூர் மக்களே: இனி ரொம்ப ஈசி!

image

திருப்பூரில் சொந்தமாக வீடு (அ) வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இதற்கு <>tamil nilam<<>> என்ற வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.

News December 16, 2025

திருப்பூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

image

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3மணி வரை, எல் ஆர் ஜி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 10th, +2, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.23க்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம். (SHAREit)

News December 16, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்(37). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே நடந்து செல்லும் போது, இவரிடம் இருந்து 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசாமி(33), முத்து கௌதம்(20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!