News March 11, 2025

திருப்பூரில் தபால் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருப்பூர் தலைமை தபால் நிலையம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. தபால்துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின் வரும் 14ம் தேதிக்குள், ‘பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Similar News

News March 12, 2025

காடையூர் அருகே வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காடையூர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (68). மூதாட்டியான இவர், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது ஆட்டுப்பட்டிக்குள் இன்று அதிகாலை புகுந்த வெறி நாய்கள், பட்டியில் இருந்த 4 வெள்ளாடுகளை கடித்து குதறியது. இதில் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக போலீசார் மற்றும் கால்நடைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 12, 2025

திருப்பூர்: சுக்ரீஸ்வரர் கோயில்!

image

திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இங்கு பஞ்ச பூதங்களையும் குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோயிலில் உள்ளன. கலியுகத்தில் தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்ட சுக்ரீஸ்வரரை, நாம் வணங்கினால் நினைத்து நடக்குமாம்.

News March 11, 2025

இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 11.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!