News August 3, 2024
திருப்பூரில் உள்ளூர் விடுமுறை

திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலை நினைவு தினைத்தையொட்டி இன்று (ஆக.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி காங்கேயத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ , பிளக்ஸ், பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
திருப்பூர்: கணவனை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்

திருப்பூர்: அங்கேரிபாளையம் அருகே வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(25). இவர், கணவரை இழந்து மகனுடன் வசிக்கும் 28 வயது பெண்ணுடன் பழகியதில், அப்பெண் கர்ப்பமானார். இதையடுத்து, அந்தப் பெண்ணை பிரவீனின் தாயார் ஏற்க மறுத்துள்ளார். ஆகையால், பிரவீன் தன்னை ஏமாற்றி விட்டதாக அப்பெண் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் தற்போது வடக்கு அனைத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 15, 2025
திருப்பூர்: குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருப்பூர் சின்னா நகர் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக, குடிநீர் பொதுமக்களுக்கு சீராக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முறையாக குடிநீர் வழங்க கோரி, சின்னாநகர் பகுதியில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
News September 14, 2025
திருப்பூர்: இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 14.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, ஊதியூர், வெள்ளகோயில், குடிமங்கலம், குன்னத்தூர், சேவூர் ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.