News September 14, 2024

திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ காங்கேயத்தில் விவசாய கிணற்றில் விழுந்ததில் மொத்தமாக 16 ஆடுகள் உயிரிழந்தது. ➤ பல்லடத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபரின் விரலை உடைத்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளனர். ➤ பல்லடம் அருகே பூமலூரில் காளை மாடு முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ➤ ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து மல்லிகை பூ ரூ.500-ல் இருந்து ரூ.2,000 விற்பனை.

Similar News

News November 6, 2025

திருப்பூரில் வாகனங்களை நிறுத்த திடீர் தடை

image

திருப்பூர் மாநகரின் வளர்மதி அருகே சுரங்க பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை நிறுத்த தடை செய்யப்பட்டு போலீசார் சார்பில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது

News November 5, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 05.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம், இப்பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் .அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News November 5, 2025

திருப்பூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

image

திருப்பூர் அரிசி கடைவீதியைச் சேர்ந்த நந்தினி. கடந்த 4 மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். ராமமூர்த்தியின் செயல்பாடு பிடிக்காததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் நேற்று ராமமூர்த்தி பேச மறுத்த நந்தினியை பின் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!