News April 10, 2025
திருப்பூரில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை, மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Similar News
News April 19, 2025
வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோயில்

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் அருகே பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுக்ரீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் நினைத்தது நடக்கும், மருகு போன்ற தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 19, 2025
திருப்பூர்: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0421-2971117. ▶️திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் 0421-2971122. ▶️சிறுபான்மையினர் நல அலுவலர் 0421-2971130. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0421-2971128. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0421-2971116. ▶️உதவி ஆணையர் (கலால்) 0421-2971103. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0421-2971141. ▶️உதவித் திட்ட அலுவலர் (வீடுகள்&சுகாதாரம்) 0421-2971177. இதை SHARE பண்ணுங்க.
News April 19, 2025
பனியன் துணி வாங்கி மோசடியில் ஈடுபட்டவர் கைது

திருப்பூர் காந்திநகரில் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் மகேஷ் ராமசாமி. இவரிடம் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி, பனியன் துணிகள் வாங்கி ரூ.1.45 கோடி, மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஷ் ராமசாமி அளித்த புகாரின்பேரில், போலீசார் தம்பதியை தேடி வந்தனர். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த, பிரவீன் குமார் யெச்சூரி, கல்பனா யெச்சூரி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.