News August 7, 2024

திருப்பூரிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கம்பளி, பெட்ஷீட், ஆடைகள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பு சார்பில் திருப்பூரில் இருந்து அனுப்பி இன்று வைக்கப்பட்டது.

Similar News

News December 9, 2025

திருப்பூர்: ரூ.48,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, விஸ்வாபாரதி நகர், தேவம்பாளையம், கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி,வி நகர், திருநீலகண்ட வீதி, நெசவாளர் காலனி, கமிட்டியார் காலனி, வெங்கடாஜலபதி நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 9, 2025

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(56). இவர் அந்த பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை காரணமாக வஞ்சிபாளையம் சோமனூர் இடையே தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!