News March 28, 2024

திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக விழா

image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News December 19, 2025

மதுரையில் நூதன முறையில் ரூ.15 லட்சம் மோசடி

image

செல்லூரை சேர்ந்­த­ உத­யகு­மாரிடம்(34) அப்­துல் ரஷீத், ஜாபர் ஷெரீப் ஆகி­யோர் ரயில்வே துறை­யில் வேலை வாங்­கித் தருவ­தாக கூறி உள்­ள­னர். இதற்­காக மொத்­தம் ரூ.15 லட்­சம் பல்வேறு கட்டங்களில் பெற்றுள்­ள­னர். பின் அவர்கள் வேலைக்கான உத்தரவை கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த வேலை உத்­த­ரவு போலியா­னது என தெரிந்­தது. செல்லூர் போலீ­சார் இருவர் மீதும் இன்று வழக்­குப்­ பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 19, 2025

சிக்கந்தர் பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா நிபந்தனைகள்

image

தி.குன்றம் உஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, டிச.21ம் தேதி நடைபெறும் கொடியேற்றம் & சந்தனக்கூடு நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி நடத்த முடிவு. வழக்கமான ஊர்வல பாதைகளில் மட்டும் ஊர்வலம் நடைபெற வேண்டும். பட்டாசு பயன்படுத்தக் கூடாது. விதிமீறலால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தர்ஹா நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என நிபந்தனை.

News December 19, 2025

மதுரை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!