News March 28, 2024

திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக விழா

image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News August 13, 2025

மதுரை மாநகராட்சி மேயர் கணவர் GH-ல் அட்மிட்

image

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடந்த விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தற்போது பொன்வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் விசாரணைக்காக அவர் மதுரை அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தற்போது இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

News August 13, 2025

மதுரை: ஆக.15ல் மதுக்கடைகள் அடைப்பு

image

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று (ஆக.12) வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆக.15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வாணிபக் கழகம் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து இயக்கும் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை நிலையம் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 13, 2025

மதுரை: இங்கெல்லாம் இன்று மின்தடை

image

மதுரை மாவட்டத்தில் இன்று (ஆக.13) பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. உசிலம்பட்டி நகர், பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, சீமானூத்து, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வாகைக்குளம், மாதரை, தொட்டப்பநாயக்கனூர்,இடையபட்டி,உத்தப்பநாயக்கனூர்,திருநகர்,ஹார்விபட்டி, மேக்கிலார்பட்டி, கிரிபட்டி,பொக்கம்பட்டி, நக்கலப்பட்டி, வில்லாணி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

error: Content is protected !!