News March 28, 2024

திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக விழா

image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News December 12, 2025

தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை: தமிழக அரசு வாதம்

image

திருப்பரங்குன்றம் வழக்கில், இன்று (டிச.,12) நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது.

News December 12, 2025

மதுரை : SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

image

மதுரை மக்களே, நீங்க கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து லாகின் பண்ணுங்க.
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க.

News December 12, 2025

மீனாட்சி அம்மன் கோவிலில் நடை திறப்பு மாற்றம்

image

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15 2026 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி திருப்பள்ளியெழுச்சியை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும் பிறகு 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!