News March 24, 2025
திருப்பத்தூர்: வங்கியில் ரூ.1.30 கோடி மோசடி

திருப்பத்துார் மாவட்டம், கருப்பனுாரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42. இவர் காந்திபேட்டை இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். 2011- 2025 மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், 42 வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து, 200 சவரன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. புகாரின்பேரில் திருப்பத்துார் டவுன் போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.
Similar News
News November 16, 2025
வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை முயற்சி

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகர் சேர்ந்தவர் பூவரசன் இவரது மனைவி செல்வி இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். இன்று (நவ.15) மீண்டும் வயிற்றுப் வலி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த எலி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
News November 16, 2025
ஜோலார்பேட்டை அருகே 4 மாதம் கர்ப்பிணி தாக்கிய கணவன்

ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வா இவரது மனைவி வளர்மதி என்பவர் 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் இன்று (நவ.15) கணவர் விஸ்வா தனது மனைவியிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த வளர்மதி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 16, 2025
ஆம்பூர் அருகே தனியார் கல்லூரி வாகனம் மீது கார் மோதி விபத்து

ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் செல்லும் நிலையில், நேற்று (நவ.15) ஆம்பூரில் இருந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் பின்பக்கம் கார் மோதி விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.


