News April 24, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News April 26, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் கோட்டை ஈஸ்வரன் கோயில்

திருப்பத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
News April 25, 2025
ரோந்து பணியில் உள்ள காவலர் அதிகாரிகளின் விவரங்கள்

இன்று (ஏப்ரல்.25) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் காவல் நிலைய ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் மாவட்ட காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இரவில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக இந்த எண்ணிற்கு அழைக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News April 25, 2025
திருப்பத்தூரில் புதிய தொழில் பூங்கா அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று புதியதாக சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தொழில் பூங்கா அமைக்க சட்டமன்றத்தில் அறிவிப்பாணையை தமிழக அரசு அறிவித்துள்ளது.