News August 6, 2024

திருப்பத்தூர் சாதிவெறி தாக்குதலை கண்டித்து மனு

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா. சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ராமநாயக்கன் பேட்டையில் நடைபெற்ற சாதிவெறி தாக்குதலை கண்டித்து இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதி வெறி தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

திருப்பத்தூர் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News November 8, 2025

திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

image

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏரிப்பட்டறை சேர்ந்தவர் கணேசன்(வயது 65) கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.7) இரவு ஜோலார்பேட்டை அடுத்த வளத்துார் மேலாளத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 8, 2025

திருப்பத்தூரில் காவலாளியை அடித்துக் கொலை!

image

திருப்பத்தூரில் உள்ள கோல்டன் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரும் பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்கின்ற அலிஜான் (65) என்பவரை மற்றொரு காவலாளி கார்த்திக் என்பவர் இன்று (நவ.8) காலை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!