News April 22, 2025
திருப்பத்தூர் அருகே வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூரை சேர்ந்த மஞ்சுநாதன் (31) என்பவர் உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், அவருக்கு நீதிபதி 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News September 15, 2025
திருப்பத்தூர்: ரிசர்வ் வங்கியில் ரூ.1லட்சம் வரை சம்பளம்!

இந்தியாவின் வங்கிகளில் தலைமையாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. அதிகாரி (DR) General அதிகாரி போன்ற பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 55,000 முதல் 1,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-30குள் இந்த<
News September 15, 2025
திருப்பத்தூர்: மர்ம மரணத்தில் வழக்கு பதிவு!

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய பெரியங்குப்பம் ஊராட்சி ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்த மணி மனைவி கன்னியம்மாள் வயது (69) கடந்த 10 தேதி வீட்டில் மாடி படிக்கட்டில் தவிர விழுந்து தலையில் பலத்த காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். சிகிச்சை பலனின்றி நேற்று செப்டம்பர் 14 மதியம் உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News September 15, 2025
திருப்பத்தூர்: கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!